இந்தியா
71 வயதை முதியவரை 1 கி.மீ -க்கு தரதரவென இழுத்துச் சென்ற இளைஞர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், கடந்த 2-ஆம் தேதி அன்று நடைபெற்றது. பெரும் காயம் அடைந்த அந்த பெண், ஆடைகள் அனைத்தும் கிழிந்து, கொடூரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதேபோன்றதொரு சம்பவம் பொங்களூரில் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரை சேர்ந்தவர் சாஹில். 21 வயதான இவர், மகாதி ரோட்டில், இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக, 71 வயதான முத்தப்பா என்ற நபர், காரில் வந்துள்ளார்.
திடீரென மிகவும் வேகமாக வந்த சாஹில், முத்தப்பாவின் காரை இடித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அந்த முதியவர், சாஹிலிடம் கடுமையக வாக்குவாதம் செய்துள்ளார். இவ்வாறு அந்த ரோடே பரபரப்பாக இருந்த சமயத்தில், தனது இருசக்கர வாகனத்தைத் எடுத்துக் கொண்டு சாஹில் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட முத்தப்பா, அந்த ஸ்கூட்டரின் பின் கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் ஸ்கூட்டரை நிறுத்தாத சாஹில், சுமார் ஒரு கி.மீட்டருக்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். இதனை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், ஸ்கூட்டரை நிறுத்தி, சாஹிலை பிடித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 71 வயது முதியவரை, ஸ்கூட்டரில் தரதரவென இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோவும், சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment Login