Connect with us

Raj News Tamil

விவாகரத்து பெற்ற பெண்கள் தான் டார்கெட்.. மாய வலையில் வீழ்த்தும் மன்மதன்.. பெண்களே உஷார்..

தமிழகம்

விவாகரத்து பெற்ற பெண்கள் தான் டார்கெட்.. மாய வலையில் வீழ்த்தும் மன்மதன்.. பெண்களே உஷார்..

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், குளச்சல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், தனித்தனியே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதில், கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்களை குறிவைத்து, ராஜீவ் என்பவர் ஏமாற்றி வருவதாகவும், செல்போனில் மிஸ்டு கால் கொடுப்பது போல் பழக்கமாகும் இவர், ஆசை வார்த்தைகள் பேசி, பெண்களை மயக்கி, அவர்களுடன் நெருக்கமாக பழகி, ஏமாற்றுவதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனிமையில் இருக்கும்போது எடுத்த வீடியோவை வைத்து, மிரட்டி பணம் பறிப்பதாகவும், அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுபோல், பல பெண்களின் ஆபாச வீடியோக்கள், ராஜீவின் செல்போனில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜீவ்வால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற பெண்களும் புகார் அளித்தால், அவர்கள் தொடர்பான ரகசியங்கள் பாதுகாப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top