Connect with us

Raj News Tamil

“உனக்கு என் பொண்டாட்டி வேணுமா ” – தலையை துண்டித்த கணவன்! பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

தமிழகம்

“உனக்கு என் பொண்டாட்டி வேணுமா ” – தலையை துண்டித்த கணவன்! பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியப்பன். மும்பையில் கூலி வேலை செய்து வரும் இவர், சமீபத்தில் ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும், சி.என். கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர், வெள்ளியப்பனை கண்டித்துள்ளார். இதனைக் கண்டுக் கொள்ளாத அவர், அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இது ஒரு புறம் இருக்க, அந்த பெண்ணின் கணவரும், அவரது உறவினர்களும், வெள்ளியப்பனை தேடியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் இந்த ஜோடி கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊருக்கு வெள்ளியப்பன் வந்துள்ளார்.

இதனை அறிந்த அந்த பெண்ணின் கணவர், தனது உறவினர்களின் உதவியுடன், அவரது தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் இந்த கொலை நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணின் கணவர் உட்பட சிலரை தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top