தமிழகம்
மனைவி குறித்து ஊர் முழுவதும் பரவிய தகவல்.. அதிர்ச்சி அடைந்து தகராறு செய்த கணவன்.. ஒரு உயிரே போயிடிச்சே..
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் உபேந்தரதாரி. இவருக்கு சித்ராதேவி (43) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், சித்ராதேவிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த வடமாநில இளைஞரான பவன் யாதவிற்கும்(27) இடையே, பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விஷயம் அப்பகுதியில் இருந்தவர்கள் மத்தியில் பரவி ஆரம்பித்து, இறுதியில் உபேந்தரதாரிக்கும் தெரியவந்தது. இதையடுத்து, பவன் யாதவின் வீட்டிற்கு சென்ற அவர், அங்கு தகராறு செய்துள்ளார்.
இந்த தகராறு முற்றிய நிலையில், தனது கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து, பவன் யாதவை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயம் அடைந்த பவன் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள உபேந்தரதாரியை தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login