Connect with us

Raj News Tamil

செய்தியாளர்கள் சந்திப்பின் போது திடீரென புகுந்த பாம்பு: தில்லாக நின்ற முதல்வர்!

இந்தியா

செய்தியாளர்கள் சந்திப்பின் போது திடீரென புகுந்த பாம்பு: தில்லாக நின்ற முதல்வர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களை சந்திப்பின் போது திடீரென கூட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கொண்டு இருந்த போது திடீரென அந்த கூட்டத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனால், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அங்கிருந்தவர்கள் ஓட முயற்சித்தனர்.

அப்போது எந்த வித பதற்றமுமின்றி முதல்வர் பூபேஷ் பாகல் அங்கே நின்று கவலைப்பட வேண்டாம். பாம்பை யாரும் அடிக்கவும் வேண்டாம் என்று கூறினார். சிறிது நேர பரபரப்பிற்கு பின் பாம்பு அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

More in இந்தியா

To Top