Connect with us

Raj News Tamil

துப்பட்டாவால் இறுக்கமாக கட்டி.. தாயும்-மகளும் செய்த விபரீதம்..

தமிழகம்

துப்பட்டாவால் இறுக்கமாக கட்டி.. தாயும்-மகளும் செய்த விபரீதம்..

தஞ்சாவூர் மாவட்டம் விளார் சாலை தில்லை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு பத்மஜோதி என்ற மனைவியும், தீபிகா, பூர்விகா என்ற இரண்டு மகள்களும் இருந்தனர்.

கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். செந்தில்குமாரிடம் மூத்த மகள் பூர்விகாவும், பத்மஜோதியிடம் இளைய மகள் தீபிகாவும் வசித்து வந்தனர்.

இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த பத்மஜோதி, தனது மகள் தீபிகாவோடு ஆற்றில் குதித்து, தற்கொலை செய்துக் கொண்டார்.

அதாவது, மகள் தீபிகாவை தனது உடலோடு சேர்த்து துப்பட்டாவால் கட்டிக் கொண்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். சடலம் ஆற்றங்கரையோரம் ஒதுங்கியதையடுத்து, அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில், அங்கு வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More in தமிழகம்

To Top