தமிழகம்
காவல் நிலையத்தில் தீக்குளித்த தொழிலாளி!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த அஞ்செட்டி அதன் சுற்றி உள்ள பகுதிளில் மறைமுகமாக பணம் வைத்து சூதாடியதாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் கடந்த 7-ம் தேதி அன்று போலீசார் தேவன்தொட்டி அருகே சென்று பார்த்த போது, அங்கு ஒரு கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அதே பகுதியை சேர்ந்த ருத்ரமாதையா (32) உட்பட 4 பேரை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ருத்ரமாதையா பறிமுதல் செய்த தனது வாகனத்தை திருப்பி வழங்க வேண்டும் என அஞ்செட்டி காவல்நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கேட்டுள்ளார். இதற்கு போலீசார் நீதின்றத்தில் அபராதம் செலுத்திய பின்னர் தான் வாகனத்தை கொடுக்க முடியும் என போலீசார் கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ருத்ரமாதையா பெட்ரோல் கேனுடன் காவல்நிலையம் முன்பு வந்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார்.
பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு காவல்நிலையத்தில் இருந்த போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடலில் எரிந்துக்கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.
இதில் தீக்காயமடைந்த அவரை போலீசார் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.