Connect with us

Raj News Tamil

“என் உயிருக்கு ஆபத்து” – சரவணன் மனைவி புகார்! சித்தப்புவின் உண்மையான முகம் இதுதானா?

சினிமா

“என் உயிருக்கு ஆபத்து” – சரவணன் மனைவி புகார்! சித்தப்புவின் உண்மையான முகம் இதுதானா?

பருத்தி வீரன், நந்தா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் சரவணன். ஆனால், அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது, ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது மனைவி சூர்யா ஸ்ரீ என்பவர், முதலமைச்சரின் தனிப் பிரிவில், தனது கணவர் சரவணன் மீது புகார் ஒன்றை வழங்கியுள்ளார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

அவர் கூறிய விபரம் பின்வருமாறு:-

“பருத்தி வீரன் படத்தில் நடிப்பதற்கு முன்பு, சரவணனிடம் பணம் எதுவும் இல்லை. நான் தான் வேலைக்கு சென்று அவரை பார்த்துக் கொண்டேன். நான் அவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டேன். ஆனால், பிக்-பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, வேறொரு பெண்ணுடன், வாழ்ந்து வருகிறார்.

எனக்கு முறையான விவாகரத்தும் அவர் வழங்கவில்லை. இதுமட்டுமின்றி, என் பணத்தில் வாங்கிய வீட்டில் இருந்து, என்னை வெளியேற்ற முயற்சி செய்கிறார். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தான் வீட்டை வாங்கினேன். ஆனால், அவருடைய பெயரில் வீட்டை வாங்கியதால், தற்போது என்னை வீட்டில் இருந்து வெளியேற்ற முயல்கிறார்..

இதுதான் நான் செய்த தவறு.. இப்போது எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அதற்கு சரவணன் தான் காரணம்.. என் உயிருக்கும் ஆபத்து உள்ளது” என்று கூறியுள்ளார். பிக்-பாஸ் நிகழ்ச்சியின் மூலம், நல்ல முகத்தை பெற்ற சரவணன் மீது அவரது மனைவி கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் இவரது உண்மையான முகமா? என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top