Connect with us

Raj News Tamil

யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..நடிகர் சூர்யா புகழஞ்சலி

தமிழகம்

யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..நடிகர் சூர்யா புகழஞ்சலி

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது : ஒரு கண்ணில் துணிச்சலும், மறு கண்ணில் கருணையுமாக வாழ்ந்த அபூர்வ கலைஞன்.

அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை. யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து உயர்ந்த அண்ணன் விஜயகாந்தின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top