அரசியல்
அதிமுக கொடிகளை பயன்படுத்துவோம்…அதை யாராலும் தடுக்க முடியாது..ஓபிஎஸ் அணி
ஓ.பன்னீர் செல்வம் நாளை மறுநாள் திருச்சியில் மாநாடு நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை அவருடைய ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்த மாநாட்டில் ஓபிஎஸ் அணி அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எச்சரித்துள்ளது.
ஒ பன்னீர் செல்வம் அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக கொடி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் “அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று எந்த நீதிமன்றமும் சொல்ல வில்லை” என பதிலளித்தார்.
அதிமுக கொடிகளை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று ஓ பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login