சினிமா
“விஜய் ரசிகர்கள் வாக்கை மீற மாட்டார்கள்” – அட்லீ
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ளவர் அட்லீ. தற்போது பாலிவுட்டுக்கு சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ, இந்த படம் உருவாக காரணமே விஜய் தான், இந்த படத்திற்காக அவர் என்னை அதிகமாக ஊக்கப்படுத்தினார்,
எது நடந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை கவனம் செலுத்துங்கள் என்று எனக்கு விஜய் அறிவுரை கூறியதாகவும் கூறினார்.
எந்த ஒரு விஜய் ரசிகன் கொடுத்த வாக்கை மீறமாட்டான், அதேபோல்தான் நானும் கொடுத்த வாக்கை மீராமல் இந்த படத்தை முடித்துக் கொடுத்தேன் என்றும் இயக்குனர் அட்லீ தெரிவித்தார்.