Connect with us

Raj News Tamil

மின்சார ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

தமிழகம்

மின்சார ரயிலில் பயணிப்போர் கவனத்திற்கு!

மிக்ஜம் புயல் காரணமாக ரயில்வே பாலங்கள் மற்றும் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால் சென்னை மின்சார ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (டிச.6) சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்து மறுஅறிவிப்பு வரும் வரை சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது.

திருவொற்றியூர் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வெளியூர் செல்லும் பல்வேறு ரயில்களும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து இயக்கப்படுவதால், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 24 மணிநேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top