Connect with us

நூதன முறையில் மோசடி செய்து வந்த பலே கொள்ளையனை, சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது..!

தமிழகம்

நூதன முறையில் மோசடி செய்து வந்த பலே கொள்ளையனை, சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது..!

புதுச்சேரி லெனின் வீதியில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் முருகானந்தம், இவரது கடைக்கு கடந்த தினங்களுக்கு முன்பு வந்த வாலிபர் ஒருவர், அங்கு பணி புரியும் பெண்னிடம் உரிமையாளர் போஃனில் பேசுவதாக கூறி, ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை வாங்கி சென்றுள்ளார். இதையடுத்து கடைக்கு வந்த உரிமையாளர், பணம் குறைவதாக உள்ளது என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த அப்பெண், நீங்கள் தொலைபேசியில் சொன்னது போல், கடைக்கு வந்த நபரிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்ததாக கூறியுள்ளார்,

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகானந்தம், உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் புகாரில் அளித்துள்ளார். கடையின் போர்டில் உள்ள உரிமையாளரின் நம்பரை தொடர்பு கொண்டு, அவரிடம் பேசியபடி கடை ஊழியர்களிடன் கொடுத்துள்ளார். பின்னர் அவர் கால்லா பெட்டியில் உள்ள ரூ. 20 ரொக்கத்தை கொடுக்க சொன்னதாக, மொத்த பணத்தையும் அந்த மர்ப நபரிடம் கொடுத்துள்ளார் என போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சிதம்பரம் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் சரவணன் என்று தெரிய வந்தது. பின்னர் தனிப்படை அமைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இதே பாணியில் பல்வேறு பல்வேறு இடங்களில் கைவரிசையை காட்டியது தெரிய வந்தது. மேலும் விசாரணைஇல் இவர் மீது மோசடி திருட்டு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top