Connect with us
Raj News Tamil

Raj News Tamil

போதைப்பொருள் கடத்திய வழக்கில் பாஜக கவுன்சிலர் கைது!

தமிழகம்

போதைப்பொருள் கடத்திய வழக்கில் பாஜக கவுன்சிலர் கைது!

தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடத்திக் கொண்டுவருவதாகத் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்புப் பிரிவிற்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் புளியறை சோதனைச் சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவிலிருந்து வந்த ஒரு வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் சுமார் 1250 கிலோ போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக செண்பகராமன் என்பவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் செங்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் என்பதும், அவர் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 24 ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக புளியரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செண்பகராமனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More in தமிழகம்

To Top