சினிமா
“திமுகவை பார்த்து பயந்த காங்கிரஸ்” – அண்ணாமலை ஓபன் டாக்!
Published on
திமுகவினர் கொள்ளை அடிப்பதை பார்த்து, காங்கிரஸ் கட்சியினரே பயந்துவிட்டனர் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் பகுதியில், பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்ட, நிர்வாகிகளிடம் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய செய்யும் என்று தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து விமர்சித்த அவர், கோட் போட்டால் மோடி ஆகிவிட முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திமுகவின் கொள்ளையை பார்த்து காங்கிரஸ் கட்சியினரே பயந்துவிட்டனர் என்றும், அதனால், காங்கிரஸ் ஆட்சியின்போது, டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Continue Reading
Advertisement
You may also like...
Related Topics:bjp, cm mk stalin, dmk, pm modi, tambaram
Click to comment
You must be logged in to post a comment Login