தமிழகம்
“இருக்கும் இடம் தெரியாமல் போய்டுவீங்க” – எச்சரித்த பாஜக செய்தித் தொடர்பாளர்!
திமுகவினர் தங்களை சீண்டினால், இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிடுவார்கள் என்று பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோவிலில், நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. அப்போது, குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்துவது தொடர்பாக, தமிழ் தேசிய பேரியக்கத்தின் உறுப்பினர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பாஜகவின் உறுப்பினர்கள் இரண்டு பேரை கைது செய்தனர். இதற்கு, அக்கட்சியின் தலைமை கடும் கண்டனங்களை கூறி வந்தது.
இந்நிலையில், பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் மா.நரசிம்மன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக என்பது அமைதியாக இயங்கி வரும் ஆன்மீக இயக்கம் என்று தெரிவித்தார்.
மேலும், திமுகவினர் தங்களை சீண்டிப் பார்த்தால், இருக்கும் இடம் தெரியாமல் ஆகிவிடுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய நரசிம்மன், இந்த சம்பவத்தை மக்கள் மத்தியில் தெரியப்படுத்துவதற்காக, அறப்போராட்டத்தையும் பாஜக மேற்கொள்ளும் என்று கூறினார்.
You must be logged in to post a comment Login