Trending
கக்கூஸில் குடிபுகுந்த கருநகப்பாம்பு..! அலறி ஓடிய ஒட்டுமொத்த குடும்பத்தினர்..!
ஈரோடு மாவட்டம் முள்ளம் பட்டியைச் சேர்ந்தவர் திவாகர். விவசாயியான இவரது வீட்டு கழிப்பறைக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளதை தொடர்ந்து, கழிப்பறைக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு சுமார் 7-அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த திவாகர், உடனடியாக பாம்பு பிடி வீரர் யுவாராஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர், கழிவறைக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் மழைக்காலம் என்பதால் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அதிகளவில் படையெடுக்கும் ஆகவே கவனமாக இருங்கள் எனக் கூறினார்.
You must be logged in to post a comment Login