Connect with us

Raj News Tamil

படுக்கையில் கிடந்த பாம்பு! – அடுத்து நடந்த சம்பவம்!

இந்தியா

படுக்கையில் கிடந்த பாம்பு! – அடுத்து நடந்த சம்பவம்!

கர்நாடகா மாநிலம், கூம்கூர் மாவட்டத்தில் உள்ள கம்பல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பா. இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்று காலை, படுக்கை விரிப்புகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது அதில் 5 அடி நீள நல்லபாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து பாம்பை பிடிக்க வாரங்கல் வனவிலங்கு மற்றும் பாம்பு பிடிக்கும் நிபுணரருக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு அந்த பாம்பை பிடித்தனர்.

பின்னர் அந்த பாம்பை அடர்ந்த காட்டுபகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். படுக்கை விரிப்பில் கொடிய விஷமுள்ள 5அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More in இந்தியா

To Top