உலகம்
திருமண விழாவிலேயே துரோகம் செய்த மணப்பெண்.. மணமகன் காலில் விழுந்து கெஞ்சும் வீடியோ வைரல்
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள கானா என்ற நாட்டை சேர்ந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திருமண நாள் அன்று, தனத பழைய காதலனை சந்திக்க வேண்டும் என்று மனமகள் ஆசைப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தனது தோழியிடம் கூறிவிட்டு, தனது காதலனை சந்தித்து பேசிவிட்டு, மீண்டும் திருமணத்தில் கலந்துக் கொள்ள வந்துள்ளார். ஆனால், இதனை அறிந்த மனமகன், திருமணத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து மிகுந்த கோபத்துடன் வெளியேறி உள்ளார்.
இதுகுறித்து மனமகள் எவ்வளவு விளக்கம் அளித்தும், மனமகன் கேட்டபாடில்லை. காலில் விழுந்து கெஞ்சியும், அங்கிருந்து அவர் கிளம்பி சென்றுவிட்டார்.
இந்த விஷயம் எப்படி அவருக்கு தெரிந்தது என்று விசாரிக்கும்போது, அந்த பெண்ணின் தோழி தான், மனமகனிடம் கூறியுள்ளாராம். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..
You must be logged in to post a comment Login