Connect with us

Raj News Tamil

கணவன் வேண்டாம்.. காதலன் வேண்டும்.. கதறி அழுத பெண்.. கொலை செய்த அண்ணன்..

தமிழகம்

கணவன் வேண்டாம்.. காதலன் வேண்டும்.. கதறி அழுத பெண்.. கொலை செய்த அண்ணன்..

சென்னை புழல் பகுதியில் உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் சுதாசந்தர். 22 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவரும், இளம்பெண் ஒருவரும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். ஆனால், இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, அந்த இளம்பெண்ணுக்கும், வசந்த் என்பவருக்கும் இடையே, திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிறகு, அந்த இளம்பெண்ணுக்கும், வசந்திற்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தனது காதலன் சுதாசந்தரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதற்கு ஆறுதல் கூறிய அவர், அடைக்கலமும் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, அந்த இளம்பெண்ணும், சுதாசந்தரும், ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். தன்னுடைய மனைவி வேறொருவரின் வீட்டில் வசிப்பதை அவமானமாக கருதிய வசந்த், அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

அவர்கள் பேசியும் கணவரிடம் சேர்ந்து வாழ மறுத்த அவர், தொடர்ந்து தனது காதலனுடனே வசித்து வந்தார். இதனால், சுதாசந்தரை கொலை செய்வதற்கு, பெண் வீட்டாரும், வசந்தும் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, இளம்பெண்ணும், சுதாசந்தரும், கடந்த 31.1.2023-ம் தேதி அன்று, பைக்கில் விநாயகபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது பைக்கை வழிமறித்து, ஆட்டோவிலிருந்து இறங்கிய அவர்கள், கண்இமைக்கும் நேரத்தில் சுதாசந்தரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இளம்பெண்ணின் அண்ணன் ராபின் என்கிற பரத் (22), அவரின் சித்தப்பா உதய்ராஜ், இளம்பெண்ணின் உறவினர் சுஷ்மிதா, ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆகிய நான்கு கைது செய்தனர். மேலும், வசந்த் உட்பட இந்த வழக்கில் தொடர்புடைய வேறு சிலரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top