Connect with us

Raj News Tamil

செஸ் உலகக்கோப்பை: பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி!

விளையாட்டு

செஸ் உலகக்கோப்பை: பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி!

தமிழ்நாட்டின் சேர்ந்த பிரக்ஞானந்தா உலகக்கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அரையிறுதிப் போட்டியில் இந்தியாவில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா அடைந்துள்ளார்.

அமெரிக்காவின் பேபியானா காருவானாவை சந்தித்தார். அரைஇறுதி சுற்று இரு ஆட்டங்கள் கொண்டது. இரு ஆட்டமும் டிராவில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் டைபிரேக்கருக்கு சென்றது.

அதிவேகமாக காய்களை நகர்த்தும் டைபிரேக்கரில் இருவரும் 4 ஆட்டங்களில் மோத வேண்டும். இதன்படி முதல் 2 ஆட்டம் டிரா ஆனது. 3-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் சாதுர்யமாக செயல்பட்ட பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் எதிராளியை அடக்கி அசத்தினார். எஞ்சிய ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. முடிவில் பிரக்ஞானந்தா பேபியானாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சனை (நார்வே) எதிர்கொள்ளவுள்ளார்.

More in விளையாட்டு

To Top