Connect with us
Raj News Tamil

Raj News Tamil

முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழகம்

முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘X’ வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன். உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More in தமிழகம்

To Top