Connect with us

Raj News Tamil

செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர்.. செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது ஏன்?

தமிழகம்

செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர்.. செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றது ஏன்?

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில், அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, எ.வ.வேலு உள்ளிட்டோர், மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை, தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே சென்று சந்தித்தார்.

அவரிடம் நலம் விசாரித்த பின், செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை பார்த்து உடனேயே, முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்து கிளம்பிவிட்டார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top