Connect with us

Raj News Tamil

தோசையில் ஒளிந்திருந்த கரப்பான் பூச்சி.. பிரபல உணவகத்தில் நடந்த கொடுமை..

தமிழகம்

தோசையில் ஒளிந்திருந்த கரப்பான் பூச்சி.. பிரபல உணவகத்தில் நடந்த கொடுமை..

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான உணவகங்களில் ஒன்று அண்ணபூர்ணா. இந்த கடையில் உள்ள உணவுப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பினும், சுவையின் காரணமாக, மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.

இந்நிலையில், பிரசாந்த் என்பவர், தனது குடும்பத்துடன், கடந்த 30-ஆம் தேதி அன்று, அண்ணபூர்ணா உணவகத்திற்கு சென்றுள்ளார்.

மசால் தோசை ஆர்டர் செய்த அவருக்கு, கரப்பான் பூச்சி தோசை தான் கிடைத்துள்ளது. அதாவது, மசாலா தோசையின் உள்ளே, கரப்பான் பூச்சி இறந்து கிடந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அந்த கரப்பான் பூச்சி தோசையை வீடியோ எடுத்த அவர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தோசையில் கரப்பான் பூச்சி இருப்பது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, அண்ணபூர்ணா உணவகத்தின் தரத்தை அம்பலப்படுத்தி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top