Connect with us

Raj News Tamil

சால்னாவில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்.. மெத்தனமாக பேசிய பிரபல உணவகம்..

தமிழகம்

சால்னாவில் கரப்பான் பூச்சி.. அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்.. மெத்தனமாக பேசிய பிரபல உணவகம்..

தாம்பரம் அருகே, பிரபல உணவகத்தின் குழம்பில், கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், அப்பகுதியில் உள்ள பிரபல ஆனந்தி சைவ உணவத்தில், புரோட்டாவும், சால்னாவையும் பார்சல் வாங்கியுள்ளார்.

வீட்டிற்கு சென்று சாப்பிட முயன்றபோது, சால்னாவில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவத்திற்கு சென்று, இதுகுறித்து கேட்டுள்ளார்.

ஆனால், அதன் உரிமையாளர், சரியான பதில் அளிக்காமல், மெத்தனமாக பேசியுள்ளார். இவை அனைத்தையும் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்திருந்த ராஜா, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும், புகார் அளித்துள்ளார். அதிகாரிகளின் விசாரணைக்கு பயந்த உணவக உரிமையாளர், தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

More in தமிழகம்

To Top