Connect with us

Raj News Tamil

குடிநீர், கழிவுநீர் தொடர்பாக 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கலாம்!

தமிழகம்

குடிநீர், கழிவுநீர் தொடர்பாக 24 மணிநேரமும் புகார் தெரிவிக்கலாம்!

குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றல் தொடா்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த வாரியம் சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றல் தொடா்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதுக்கு வசதியாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறை குடிநீா் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்: 044-4567 4567, கட்டணமில்லா எண் 1916- ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம். மேலும், சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top