Connect with us

Raj News Tamil

அடுத்த 3 வருஷத்துக்கு அப்புறம் தனுஷ் தான் உச்சத்துல இருப்பாரு? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 5 படங்கள்!

சினிமா

அடுத்த 3 வருஷத்துக்கு அப்புறம் தனுஷ் தான் உச்சத்துல இருப்பாரு? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 5 படங்கள்!

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு எப்போதும், தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த 3 வருடங்களுக்கு இவரது லைன் அப் பயங்கரமாக உள்ளதாக, சினிமா தரப்பினர் கூறி வருகின்றனர். அதாவது, இவர் கடைசியாக திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த படங்களுக்கு பிறகு, அருன் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர், தனுஷே இயக்க உள்ள D50, பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் D51, வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை 2, பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் இந்தி படம் என்று வரிசையாக, மிகப்பெரிய லைன் அப் வைத்திருக்கிறார்.

இந்த படங்களின் மீது இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாகவும், அந்த படங்களும், அதற்கேற்றவாறு பெரிய ஹிட் அடித்தால், தனுஷ் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இருப்பார் என்று சொல்லப்பட்டு வருகிறது.

More in சினிமா

To Top