Connect with us

Raj News Tamil

வீடு புகுந்து தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு!

தமிழகம்

வீடு புகுந்து தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகரை சேர்ந்தவர் சித்ரா (44). தி.மு.க.வை சேர்ந்த இவர் 3வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

நேற்று இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இவருடைய வீட்டிற்குள் புகுந்து சித்ரா அவரது கணவர் ரவிக்குமார் (47), மகன் மோகன் (24) ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top