Connect with us

Raj News Tamil

திமுக பட்டியலின மக்களின் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது: எடப்பாடி கே.பழனிசாமி!

அரசியல்

திமுக பட்டியலின மக்களின் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது: எடப்பாடி கே.பழனிசாமி!

பட்டியலின மக்களின் பாதுகாவலா் என்று கூறிக்கொள்ளும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென்காசி வெங்காடம்பட்டி ஊராட்சியில் லெட்சுமியூா், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடா் காலனியில் வசிக்கும் சுமார் 40 வீடுகளுக்கு குடிநீா் வசதி இல்லை என்று குடிநீா் குழாய் இணைப்பு வழங்கக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் அதிமுக ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் கே.ஜனதாவிடம் முறையிட்டுள்ளனா். அந்தப் பகுதியில் பைப் லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க ஜனதா தனது உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.5.10 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை முடித்துள்ளார்.

ஆனால், அந்தப் பணிகள் முடிந்தும் பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், திமுகவை சோ்ந்த கடையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் திட்டமிட்டு ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடா் காலனி வீடுகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி குழாய்களில் குடிநீா் திறந்துவிடவில்லை. மேலும், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், குடிநீா் திறந்துவிடாததற்கு ஒரு தீா்மானத்தை நிறைவேற்றிய அவலமும் நடந்தேறியுள்ளது. இதைக் கண்டித்து அதிமுகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பட்டியலின மக்களின் பாதுகாவலா் என்று கூறிக்கொள்ளும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தமிழகமே தலைகுனியும் வகையிலான சம்பவம் நடைபெற்றது. தற்போது, ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கே குடிநீா் வழங்காமல் திமுகவினா் தடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவா் கூறியுள்ளார்.

More in அரசியல்

To Top