Connect with us

Raj News Tamil

தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை

தமிழகம்

தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் சரமாரி வெட்டிக்கொலை

திண்டுக்கல் கிழக்கு பகுதி தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளராக சரவணன் (30) இருந்து வந்தார். இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு காரில் வந்த 4 பேர் சரவணனை சரமாரியாக வெட்ட தொடங்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரவணன் துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்விரோதம் காரணமாக 7 பேர் கொண்ட கும்பல் சரவணனை கொலை செய்து இருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்லில் குடியிருப்பு பகுதியில் தி.மு.க. நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More in தமிழகம்

To Top