Connect with us

Raj News Tamil

கருக்கலைப்புக்கு சென்ற பெண்.. பாலியல் வன்கொடுமை தந்த மருத்துவர்.. அதிர்ச்சி அடைந்த கணவன்..

தமிழகம்

கருக்கலைப்புக்கு சென்ற பெண்.. பாலியல் வன்கொடுமை தந்த மருத்துவர்.. அதிர்ச்சி அடைந்த கணவன்..

சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ள சிட்கோ நகரை சேர்ந்த இளம்பெண், தனது கணவன் மற்றும் ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இப்பெண்ணுக்கு 2-வது முறையாக கருவுற்றிருக்கிறார்.

கருவுற்று 50 நாட்களை கடந்த நிலையில், அந்த பெண்ணுக்கு உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கருவை கலைக்க முடிவு செய்த அந்த பெண், கடந்த 12-ஆம் தேதி அன்று, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சிகிச்சை முடிந்து, நேற்று இரவு, அந்த பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு சென்றுக் கொண்டிருக்கும்போது, சிகிச்சை அளித்த மயக்கவியல் மருத்துவர் இளங்குமரன், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கணவரிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த மருத்துவரிடம் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம், மருத்துவரே அத்துமீறி நடந்துக் கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top