Connect with us

Raj News Tamil

“காசுக்கு நான் எங்க போவேன்.. நானே ஓசில சரக்கு அடிச்சேன்” – போதையில் போலீசாரிடம் இளம்பெண் வாக்குவாதம்!

Trending

“காசுக்கு நான் எங்க போவேன்.. நானே ஓசில சரக்கு அடிச்சேன்” – போதையில் போலீசாரிடம் இளம்பெண் வாக்குவாதம்!

சாலை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக, அரசு பல வழிமுறைகளை வகுத்துள்ளது. குறிப்பாக, அபராதங்களை சமீபத்தில் உயர்த்திய அரசு, இப்போதாவது விதிகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்று எதிர்பார்த்தது. ஆனால், இன்றும் சிலர் விதிகளை முறையாக பின்பற்றாமல் உள்ளர்.

இதுமட்டுமின்றி, போலீசார் அதற்கு அபராதங்களை விதித்தால், வாக்குவாதம் செய்யும் சம்பவங்களும், ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அப்படியான சம்பவம் ஒன்று சென்னையில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. சென்னை சைதாப்பேட்டை பகுதியில், போக்குவரத்து போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை மடக்கி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சரியாக பேசவே முடியாத நிலையில், செம போதையில் அந்த பெண் இருந்துள்ளார். இதனை அறிந்த போலீசார், அந்த பெண்ணிற்கு அபராதம் விதிக்க முயன்றுள்ளனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண், வாக்குவாதம் செய்துள்ளார். ”சார், நானே இன்னைக்கு ஓசியில குடிக்க போனேன்… டெய்லி குடிச்சிட்டுத்தான் வண்டியில போறேன். இன்னைக்கு மட்டும் ஏன் கேசு போடுறீங்க. என் மீது வழக்கு பதிவு செய்தால் நான் பைன் கட்ட காசுக்கு எங்க போவேன்” என்று போதையில் வாக்குவாதம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top