Connect with us

Raj News Tamil

உத்தரகாண்டில் நிலநடுக்கம்…டெல்லியில் அதிர்ந்த கட்டிடங்கள்..!

இந்தியா

உத்தரகாண்டில் நிலநடுக்கம்…டெல்லியில் அதிர்ந்த கட்டிடங்கள்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது.

துருக்கி, சிரியாவை தொடர்ந்து உலகின் பல நாடுகளிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களிலும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்ட் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின. அதிர்வை உணர்ந்த மக்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருந்து அச்சத்துடன் வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top