தமிழகம்
ரமலான் பண்டிகையயொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து
இஸ்லாமியர்கள் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
ரமலான் பண்டிகையயொட்டி அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும், அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்.
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம் உலகிற்கு பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளை செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்பமுடன் கொண்டாடும், அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த #ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) April 22, 2023
தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம் என்று நபிகள் நாயகம்… pic.twitter.com/ZUPu2lLn2j
You must be logged in to post a comment Login