Connect with us

Raj News Tamil

சொத்து பிரச்சனை.. கொடூரமாக கொல்லப்பட்ட விவசாயி..

தமிழகம்

சொத்து பிரச்சனை.. கொடூரமாக கொல்லப்பட்ட விவசாயி..

ஓசூர் அருகே, மர்ம நபர்களால் விவசாயி படுகொலை செய்யப்பட்டது குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடி பகுதியை சேர்ந்தவர் சிவராமப்பா. 50 வயதாகும் இவர், விவசாயம் செய்து வந்தார்.

இந்நிலையில், இவர் சம்பவத்தன்று காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சொத்து பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், உறவினர்களே செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த படுகொலையால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை நிலவி வருகிறது.

More in தமிழகம்

To Top