Connect with us

Raj News Tamil

கடுமையான வயிறு வலி.. தந்தையே சிறுமிக்கு செய்த கொடூரம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி.. பாலியல் கொடுமை..

தமிழகம்

கடுமையான வயிறு வலி.. தந்தையே சிறுமிக்கு செய்த கொடூரம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி.. பாலியல் கொடுமை..

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை பகுதியை சேர்ந்தவர் சாந்தி ( பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ). 27 வயதான இவர், தனது கணவன் உயிரிழந்த நிலையில், சுரேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

இதையடுத்து, சாந்தி, சுரேஷ், அவரது 2 மகள்கள் ஆகியோர், ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி அன்று, சாந்தியின் மகள்களில் ஒருவருக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அந்த சிறுமி, கர்ப்பமாக இருந்து, கரு கலைந்திருப்பது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், தனது தாயின் இரண்டாவது கணவர் சுரேஷ் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர். தந்தையே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in தமிழகம்

To Top