இந்தியா
துண்டு துண்டாக சிதறிக் கிடந்த உடல்கள்.. கள்ளக்காதலால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..
ராஜஸ்தான் மாநிலம் நாகவூர் பகுதியை சேர்ந்தவர் அனோப் ராம். இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால், அந்த காதலுக்கு இளம்பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணுக்கு, வேறொரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
என்ன தான் திருமணம் நடந்திருந்தாலும், அந்த பெண், தனது காதலனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்நிலையில், அந்த இளம்பெண் தனது காதலனை பார்ப்பதற்காக, கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அன்று, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சில நாட்கள் தங்கிய இருவரும், உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே, அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆனது தொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அனோப் ராம், அந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து, அந்த உடல்களை துண்டு துண்டாக வெட்டி, கிணற்றின் ஓரமாக வீசிவிட்டு, தப்பி ஓடினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அனோப் ராமை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login