Connect with us

Raj News Tamil

கணவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தர நினைத்த மனைவி.. நடந்த கொடூரம்.. பறிபோன 2 உயிர்..

தமிழகம்

கணவருக்கு அதிர்ச்சி வைத்தியம் தர நினைத்த மனைவி.. நடந்த கொடூரம்.. பறிபோன 2 உயிர்..

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ். இவர், நிகிதா என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு, தாஸ் தொடர்ந்து மது அருந்தி வந்ததால், இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே, தனது கணவனை திருத்துவதற்கு, மனைவி செய்த நாடகத்தால், கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

அதாவது, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துக் கொள்வது போல் நடித்து, தனது கணவன் தாஸை திருத்த மனைவி நிகிதா முயற்சி செய்துள்ளார். ஆனால், உண்மையிலேயே அவரது உடலில் நெருப்பு பற்றிக் கொண்டு, விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாஸ், தனது மனைவியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்கள் இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை பலன் இன்றி, நிகிதா கடந்த 2-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அவரது கணவன் கடந்த வெள்ளிக் கிழமை அன்று, பரிதாபமாக உயிரிழந்தார்.

More in தமிழகம்

To Top