தமிழகம்
கர்நாடக மதுபாட்டில் தமிழகத்தில் விற்பனை.. 4 பெண்கள் கைது..
வாணியம்பாடி அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பெண்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள நேதாஜி நகரில், வெளி மாநில மது பாட்டில்களை விற்பனை செய்வதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த 4 பெண்களை, காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த மதுபாட்டில்கள் அனைத்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment Login