Connect with us

Raj News Tamil

எதிர்த்து பேசிய 12-வது மனைவி.. அடித்தே கொன்ற கணவன்.. 11 மனைவிகளுக்கும் இதே நிலை தான்..

இந்தியா

எதிர்த்து பேசிய 12-வது மனைவி.. அடித்தே கொன்ற கணவன்.. 11 மனைவிகளுக்கும் இதே நிலை தான்..

ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள தாராபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திர தூரி. இவருக்கு 11 திருமணங்கள் நடந்த நிலையில், மனைவிகள் ஒவ்வொருவரையும் அடித்து கொடுமைப்படுத்தியதால், அவர்கள் அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.

இதன்காரணமாக, சாவித்ரி தேவி என்ற 40 வயது பெண்ணை, 12-வது முறையாக திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, ராமசந்திர தூரியும், அவரது மனைவி சாவித்ரி தேவியும், மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையே, குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ராமசந்திர தூரி, கட்டையை எடுத்து, மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top