Connect with us

Raj News Tamil

இரண்டு வருடங்களாக ஹோட்டலுக்கு டிமிக்கி கொடுத்த நபர் ! 58 லட்சத்தை இழந்த ஹோட்டல் !

உலகம்

இரண்டு வருடங்களாக ஹோட்டலுக்கு டிமிக்கி கொடுத்த நபர் ! 58 லட்சத்தை இழந்த ஹோட்டல் !

காமெடி காட்சி ஒன்றில், வடிவேலு சைக்கிளை வாங்கிவிட்டு, அதனை தராமல் இழுத்தடிப்பார். கடைசியில், பார்த்திபன் வந்த பிறகு தான் அந்த பிரச்சனை தீரும். இதேமாதிரியான சம்பவம் ஒன்று, நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

அதாவது, தலைநகர் டெல்லியில், ரோசியேட் ஹவுஸ் எனும் 5 நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் தங்குவதற்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, அங்குஷ் தத்தா என்பவர் வருகை தந்துள்ளார்.

அன்றில் இருந்து 603 நாட்கள் தங்கிய அவர், வெறும் ஒரு நாளுக்கு மட்டுமே வாடகை பணத்தை செலுத்தியுள்ளார். இதனால் பொறுமையை இழந்த ஹோட்டல் நிர்வாகத்தினர், அவரை வெளியேற்றுவதற்காக, காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், ஹோட்டல் ஊழியர்களுடன் கூட்டணி சேர்ந்து பண பரிவர்த்தனைகளை மாற்றி, போலிக் கணக்குகள் தயார் செய்து, இந்த குற்றத்தை அங்குஷ் தத்தா செய்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top