Connect with us

Raj News Tamil

விவாகரத்து கேட்ட மனைவி.. ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்ற கணவன்.. 4 வயது குழந்தையையும் விட்டுவைக்காத கொடூரம்..

உலகம்

விவாகரத்து கேட்ட மனைவி.. ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்ற கணவன்.. 4 வயது குழந்தையையும் விட்டுவைக்காத கொடூரம்..

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கல். 42 வயதான இவருக்கு தௌசா ஹைட் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுடன், தௌசா ஹைட்டின் தாயாரும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மைக்கலிடம் இருந்து அவரது மனைவி தௌசா, விவாகரத்து பெற முயற்சித்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த அவர், அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவை எடுத்துள்ளார்.

அதாவது, துப்பாக்கியுடன் வீட்டிற்குள் நுழைந்த மைக்கல், தனத மனைவி தௌசா, மகள்கள் 3 பேர், மகன் 2 பேர், மாமியார் என்று வீட்டில் இருந்த அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர், தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டிற்குள் கிடந்த 8 உடல்களையும் மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top