Connect with us

Raj News Tamil

தூக்கத்தை தொலைத்த சந்தேகம்.. மனைவியின் உடலை இரண்டு துண்டாக வெட்டிய கணவன்..

இந்தியா

தூக்கத்தை தொலைத்த சந்தேகம்.. மனைவியின் உடலை இரண்டு துண்டாக வெட்டிய கணவன்..

வடக்கு வங்கத்தில் உள்ள சில்லிக்குறி பகுதியை சேர்ந்தவர் அன்சாருல். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். ரேணுகாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் கொண்ட அன்சாருல், மனைவியிடம் அவ்வப்போது, தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் சந்தேகம் வலுத்த நிலையில், தனது மனைவியை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த அவர், உடலை இரண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

பின்னர், உடலின் இரண்டு பகுதிகளையும் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருந்த கால்வாயில், வீசிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அன்சாருல்லை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, டெல்லியில், லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த பெண்ணை, அவரது பார்டனர் 32 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top