தமிழகம்
அத்தையுடன் கள்ளக்காதல்.. இளைஞர் செய்த துரோகம்.. பழிதீர்த்த நண்பன்..
நாமக்கல் மாவட்டம் அக்கலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனு. கோவை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, இவருக்கும், இவரது நண்பன் பிரவீன் குமாரின் அத்தை மீனா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விஷயம், ஊர் முழுவதும் பரவிய நிலையில், இருவரும் இனிமேல் தங்களது பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில், வீட்டின் வெளியே சீனு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த சீனுவின் நண்பன் பிரவீன் குமார், தனது கையில் வைத்திருந்த கத்தியை வைத்து, அவரை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பிரவீன் குமாரை கைது செய்தனர்.
You must be logged in to post a comment Login