Connect with us

Raj News Tamil

விஸ்வாசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது – மும்பைக்கு பதிலடி கொடுத்த பதிரனா?

விளையாட்டு

விஸ்வாசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது – மும்பைக்கு பதிலடி கொடுத்த பதிரனா?

கடந்த ஐ.பி.எல் போட்டியில், சென்னை அணியில் கலந்துக் கொண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மதீஷா பதிரனா.

இவர், 2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று கிசுகிசுக்கப்பட்டது.

அதற்கு காரணம் என்னவென்றால், உலகக் கோப்பை போட்டியில், இவர் சிறப்பாக விளையாடாததால், சென்னை அணி இவரை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதேபோல், இலங்கை நாட்டை சேர்ந்த மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணியில், பந்து வீச்சு பயிற்சியாளராக இருப்பதால், அவர் அந்த அணியால், வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த கிசுகிசுக்களுக்கு பதில் சொல்லும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஸ்வாசத்தை பணம் கொடுத்து வாங்க முடியாது என்று கூறியுள்ளார்.

இவரது இந்த பதிவு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தான் என்றும், அவர்கள் தான், பதிரனாவை அதிக விலை கொடுத்து வாங்க முயற்சி செய்தனர் என்றும், சி.எஸ்.கே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், சென்னை ரசிகர்கள் மீதும், சென்னை மண் மீதும், பதிரனா அதிக மரியாதையும், விஸ்வாசமும் வைத்துள்ளார் என்றும், ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More in விளையாட்டு

To Top