அரசியல்
ஆளுநர் ஆர்.என் ரவியை அகற்றக் கோரி கையெழுத்து இயக்கத்தை தொடங்கும் மதிமுக
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவி அவர்களை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்த உள்ளது.
தலைநகர் சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.
கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் கோவையிலும், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் கடலூரிலும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் தென் சென்னையிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.
கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்த உள்ளனர்.
You must be logged in to post a comment Login