Connect with us

Raj News Tamil

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்…தட்டி தூக்கிய போலீஸ்

இந்தியா

பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டல்…தட்டி தூக்கிய போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தைச் சேர்ந்த விக்னேஷ்(வயது 24) என்பதும், இவர் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் புதுவையை சேர்ந்த 4 பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்துள்ளது. அதில் அவர்களின் முகத்தை மாற்றிவிட்டு அவர்கள் நிர்வாணமாக இருப்பதுபோல அந்த படம் இருந்தது. அதற்கு கீழ் ஒரு எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணில் வீடியோகாலில் நிர்வாணமாக வர வேண்டும். இல்லையென்றால் இந்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து 4 பெண்களும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

More in இந்தியா

To Top