Connect with us

Raj News Tamil

“என்னோட புல்டோசர் ரெடியா இருக்கு” – சொல்கிறார் முதலமைச்சர்!

இந்தியா

“என்னோட புல்டோசர் ரெடியா இருக்கு” – சொல்கிறார் முதலமைச்சர்!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வரும் 17-ஆம் தேதி அன்று, சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு, காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் செயல்பட்டு வருகிறது.

இதனால், இருதரப்பு தலைவர்களும், அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்மா பகுதியில், முதலமைச்சர் சிவராஜ் சோஹான் பொதுமக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, பேசிய அவர், “ தங்களுக்குள் தான் வாக்கு செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மக்களை அச்சுறுத்துகிறதா என்று எனக்கு கண்டிப்பாக தெரிய வேண்டும்.

அது உண்மை என்ற மக்கள் சொன்னால், என்னுடைய புல்டோசர் தயாராக தான் உள்ளது.

அவர்களுடைய போக்கிரித்தனங்களை எங்களால், பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, உங்களை அழித்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாம்பால் யோஜனா மாதிரியான என்னுடைய பல்வேறு நல்ல திட்டங்களை, காங்கிரஸ் கட்சி நிறுத்திவிட்டது. அதன்பிறகு, குழந்தைகளிடம் இருந்து சைக்கிளையும் அவர்கள் பிடுங்கிக் கொண்டார்கள்.

மேலும், தீர்த்த யோத்ரா என்ற திட்டத்தையும் அவர்கள் நிறுத்தி விட்டார்கள். இருந்தாலும், நான் அந்த திட்டத்தை மீண்டும் தொடங்கிவிட்டேன்” என்று கூறினார்.

More in இந்தியா

To Top