சினிமா
“பிரபுவுக்காக என் இதயம் எப்போதும் துடிக்கும்” – நடிகை குஷ்பு
பி.வாசு இயக்கத்தில், பிரபு, குஷ்பு, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில், கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்னத்தம்பி. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், குஷ்புவிற்கு பெரிய அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்நிலையில், இந்த படம் வெளியாகி, நேற்றோடு 32 வருடங்கள் ஆகிறது. இதனையொட்டி, நடிகை குஷ்பு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “சின்னதம்பி திரைப்படம் வெளியாகி, 32 வருடங்கள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது ரசிகர்கள் பொழிந்த அன்பிற்கு நான் என்னும் கடமைப்பட்டுள்ளேன்.
என் இதயம் எப்போதும், இயக்குநர் பி.வாசுவுக்காகவும், பிரபுவுக்காகவும் துடிக்கும். ஆன்மாவை சுன்டி இழுக்கும் இளையராஜாவின் இசைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login