சினிமா
உயிரிழந்த முக்கிய நபர்..! சோகத்துடன் பதிவிட்ட குஷ்பு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, தற்போது பாஜகவில் இணைந்து, அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது நடந்துள்ள சோகமாக நிகழ்வு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், கடந்த 12 வருடமாக தான் செல்லமாக வளர்த்து வந்த நாய் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடவுளே எங்கள் நாய்க்குட்டியை பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக அந்த பதிவில் கூறியுள்ளார். இதனை அறிந்த குஷ்புவின் ரசிகர்கள், அவருக்கு ஆறுதலாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login